பள பளக்கும் பட்டுக் கன்னம் வேண்டுமா?

பள பளக்கும் பட்டுக் கன்னம் வேண்டுமா?
தினமும் அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தோடு கன்னங்கள் புஷ்டிக்கும் அவசியமாகிறது.காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றி வைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும்.
சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதனால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்பு கூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும். கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பைம் தரும்.

Comments

Popular posts from this blog

How to choose face wash for oily skin?

ஆசையா வளர்த்த நகம் உடைஞ்சுடுச்சா?

உங்கள் கை,கால்களில் தேவையற்ற முடி வளருதா? இதை செய்யுங்க